மிடில் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. எல்ஐசி ஜீவன் சிரோமணி சரியான வாய்ப்பு தான்!
மிடில் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. எல்ஐசி ஜீவன் சிரோமணி சரியான வாய்ப்பு தான்! இன்சூரன்ஸ் என்றாலே ஒதுங்கியவர்கள் கூட தற்போது தேடிப்போய் இன்சூரன்ஸ் வாங்கும் நிலை இருந்து வருகின்றது. கொரோனாவின் வருகைக்கு பிறகு மக்களுக்கு இன்சூரன்ஸ் மீதான ஆர்வம் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களைச் சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தினை கொடுக்கிறது. அப்படி எனில் உங்களுக்கு ஏற்ற சிறந்த காப்பீட்டுத் திட்டம், இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஜீவன் சிரோமணி திட்டம் ஒரு நல்ல சான்ஸ் எனலாம். ரூ.1 கோடிக்கு உத்தரவாதம் எல்ஐசி அனைத்து தரப்பு மக்களையும் மனதில் வைத்து இந்த பாலிசியைத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் நீங்கள் நல்ல லாபம் பெறுவீர்கள். எல்ஐசி ஜீவன் சிரோமணி திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்குகிறது. ஜீவன் சிரோமணி திட்டம் இணைக்கப்படாத திட்டம். இதில், காப்பீட்டுத் தொகையில் குறைந்தது 1 கோடி ரூபாய்க்கு உத்திரவாதம் கிடைக்கும். ஜீவன் சிரோமணி திட்டம் எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களி...