Posts

Showing posts from October, 2022

LICயின் ஜீவன் உமாங் – வாழும்போதே பலன் தரும் சூப்பரான சேமிப்பு திட்டம்!! முழு விவரம் உள்ளே!!

Image
LICயின் ஜீவன் உமாங் – வாழும்போதே பலன் தரும் சூப்பரான சேமிப்பு திட்டம்!! முழு விவரம் உள்ளே!! தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த நிலையில் நீங்கள் நல்ல லாபம் தரும் சேமிப்பு திட்டத்தில் இணைந்தால் வாழும்போதே நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் தற்போது ஒரு சூப்பரான சேமிப்பு திட்டம் குறித்து பார்ப்போம். சேமிப்பு திட்டம் பொதுமக்கள் அனைவரும் வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இதையடுத்து தற்போது LIC நிறுவனமும் நல்ல லாபம் தரும் சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது LICயின் ஜீவன் உமாங் திட்டத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என விரிவாக பார்ப்போம். ஜீவன் உமாங் திட்டத்தில் 90 நாட்கள் முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கணக்கை தொடங்கலாம். மேலும் இதில் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் என உங்களுக்கு உகந்த காலத்தை தேர்வு செய்து பிரீமியம் தொகையை செலுத்தலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சமும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலு...

போனஸ் வந்ததற்கும் சுவாரஸ்யமான வரலாறு இருக்கு மக்களே! அதையும் தெரிஞ்சிக்கோங்க!!

Image
போனஸ் வந்ததற்கும் சுவாரஸ்யமான வரலாறு இருக்கு மக்களே! அதையும் தெரிஞ்சிக்கோங்க!! பண்டிகைக் காலம் நெருங்கி விட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சரி.. இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது.? போனஸ் என்றால் என்ன?  போனஸ் என்பது நிர்வாகத்தால் ஒரு குறிப்பிட்ட பணியாளருக்கோ அல்லது ஒரு பணியாளர் குழுவிற்கோ அவர்களின் முந்தைய பணிநாட்களில் சிறப்பாகப் பணிபுரிந்து நிர்வாகத்திற்கும், நிறுவனத்திற்கும் லாபம் சேர்த்துக் கொடுத்ததானாலோ அல்லது நிறுவனத்திற்கு வெற்றி தேடித்தந்து ஒரு குறிப்பிட்ட இலக்கினை அடைந்ததற்காகவோ அவர்களின் பணியைப் பாராட்டி நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் ஒரு பரிசுத் தொகை என்று கூறலாம். போனஸ் வரலாறு   இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வாரச் சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் மாத சம்பள முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதாவது 4 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்பட்டது. அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆ...

வட்டி மட்டுமே ரூ.36,000 கிடைக்கும்.. காலத்துக்கும் நின்னு பேசும் எல்.ஐ.சியின் ஜீவன் உமாங் பாலிசி!

Image
வட்டி மட்டுமே ரூ.36,000 கிடைக்கும்.. காலத்துக்கும் நின்னு பேசும் எல்.ஐ.சியின் ஜீவன் உமாங் பாலிசி! ஆண்டுதோறும் வட்டி பணம் பெற விரும்பாதவர்கள் பாலிசி ப்ரீமியம் காலம் முடிவடைந்த உடனையே பெரும் தொகையை பெற்றுக் கொள்ளலாம். எதிர்கால நலனுக்காக சிறுக, சிறுக சேமிக்கும் பணம்தான் பெரிய அளவில் பலன் கொடுக்கும். நாம் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை சொத்து, தங்கம் மற்றும் வங்கி, நிதி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கிறோம். நம்முடைய ஓய்வு காலத்தில் அவை தான் பணப் பாதுகாப்பு கொடுக்கும் அமுதசுரபியாக அமைகின்றன. அதிக லாபம் என்பதைக் காட்டிலும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருமானம் மற்றும் முதலீட்டிற்கு பாதுகாப்பு தரும் முதலீடுகளையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அந்த வகையில் எல்ஐசி மக்களின் பிரதான தேர்வாக அமைகிறது. எல்ஐசி வழங்கும் சிறப்பு மிகுந்த பாலிசிகளில் ஜீவன் உமாங் பாலிசியும் ஒன்றாகும். மற்ற பாலிசிகளில் இருந்து ஜீவன் உமாங் பெருமளவில் வேறுபடுகிறது. இங்கு பாலிசிதாரருக்கு வாழ்நாள் காப்பீடு வழங்கப்படுவதுடன், ஏற்கனவே வரையறுக்கப்பட்ட காலம் வரையிலும் நீங்கள் பணம் சேமிப்பதற்கான வழிமுறை ஏ...

கார் பாலிசியை புதுப்பிக்கும்போது இந்த மேட்டர எல்லாம் கவனத்துல வச்சிட்டு பண்ணுங்க! ஃப்யூச்சர்ல நல்ல பயன்தரும்!

Image
கார் பாலிசியை புதுப்பிக்கும்போது இந்த மேட்டர எல்லாம் கவனத்துல வச்சிட்டு பண்ணுங்க! ஃப்யூச்சர்ல நல்ல பயன்தரும்! கார் பாலிசியை புதுப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். கார்களின் இயக்கத்திற்கு தேவைப்படும் மிக முக்கியமான ஆவணங்களில் இன்சூரன்ஸும் ஒன்று. இது இல்லாத வாகனங்களின் இயக்கத்திற்கு அனுமதி கிடையாது என போக்குவரத்து விதிகள் கூறுகின்றன. விபத்து போன்ற கசப்பான அனுபவங்களின்போது ஏற்படும் பெரும் இழப்புகளை சரிகட்ட காப்பீட்டு திட்டங்கள் உதவுகின்றன. இதனால்தான் இந்திய போக்குவரத்து சட்டம் வாகன காப்பீட்டை கட்டாயம் என்கின்றன. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால், விபத்து போன்ற நிகழ்வுகளின்போது ஏற்படும் இழப்புகள் தனி நபரால் ஈடு செய்ய முடியதவையாக இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் உதவும் விதமாக உருவாக்கப்பட்டதே காப்பீட்டு திட்டங்கள். எனவேதான் காப்பீட்டு திட்டத்தை வைத்திருப்பதும், அதனை உரிய நேரத்தில் புதுப்பிப்பதும் மிக முக்கியமானது என கூறப்படுகின்றது. இத்தகைய ஓர் காப்பீட்டு திட்டத்தை புதுப...

மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம்

Image
மருத்துவக் காப்பீடுகளில் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகை பெறுவது எப்படி? - காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம் சென்னை: மருத்துவக் காப்பீடு எடுத்தவர்கள் காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் ‘நோ கிளெய்ம் போனஸ்’ சலுகையை எவ்வாறு பெறுவது என்பது குறித்து, காப்பீடு நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் காப்பீடுகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால், காப்பீட்டு முகவர்களை (இன்சூரன்ஸ் ஏஜென்ட்) கண்டாலே பொதுமக்கள் ஓடி ஒளிந்த நிலை மாறி, தற்போது பொதுமக்களே காப்பீட்டு முகவர்களை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கரோனா பரவலுக்குப் பிறகு, மருத்துவக் காப்பீடுகளின் அவசியம் குறித்து பொதுமக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அதிகரித்து வரும் மருத்துவச் செலவை சமாளிக்க, அனைவரும் மருத்துவக் காப்பீடு வைத்திருப்பது அவசியமாகியுள்ளது. அதேநேரம், மருத்துவக் காப்பீடு எடுக்கும்அனைவரும் அதை முழுமையாக பயன்படுத்துவது இல்லை. அவ்வாறு பயன்படுத்தாதகாப்பீடுதாரர்களுக்கு ‘நோ கிளெய்ம் போனஸ்’ என்ற சலுகையை காப்பீடு நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால், போதி...

எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!

Image
எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை..! இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், பயன்படுத்தும் பண அளவும் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பலே முக்கியமான மாற்றங்களைச் சமீபத்தில் ஆர்பிஐ கொண்டு வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான குறிப்பிட்ட கட்டணத்தை மாற்றியுள்ளது, இப்புதிய கட்டணம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்ட உள்ளது. அப்படியானால் நவம்பர் 15 க்கு பின்பு நீங்கள் செய்யப்படும் ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் புதிய கட்டணங்கள் அடிப்படையில் வசூலிக்கப்படும். புதிய கட்டணம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கும், வீட்டு வாடகை பேமெண்ட்-க்குமான கட்டணத்தை நவம்பர் 15 ஆம் தேதி முதல் மாற்றியுள்ளது. அதாவது ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்குத் தற்போது 99 ரூபாய் + வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இதற...

புதுசா வாகன இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா.. அப்படின்னா இந்த 5 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

Image
புதுசா வாகன இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா.. அப்படின்னா இந்த 5 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க! இந்தியாவில் விழாக்கால பருவம் என்பது களைகட்டத் தொடங்கி விட்டது. பலரும் தங்களது ஷாப்பிங்கினை ஏற்கனவே தொடங்கி விட்டனர். வழக்கம்போல இந்த விழாக்கால பருவத்திலும் பல சலுகைகள், தள்ளுபடிகள் என எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல வாகன நிறுவனங்களும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. குறிப்பாக தள்ளுபடி சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. அப்படி ஒரு சலுகையினை பயன்படுத்த திட்டமிட்டுள்ளீர்களா? புதியதாக கார் வாங்க அல்லது வேறு ஏதேனும் வாகனம் வாங்க இது தான் சிறந்த வழி. புதிய கார் வாங்குகிறீங்களா?  பொதுவாக புதிதாக ஒரு கார் வாங்கும்போது நாம் பார்க்கும் விஷயங்கள், அது என்ன மாடல், அதன் விலை என்ன? அதன் இன்ஜின் எந்த வகை, அதன் திறன், விலை என பல விவரங்களை தெரிந்து கொள்வோம். ஆனால் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய கார் இன்சூரன்ஸ் பற்றி கேட்க மாட்டோம். சொல்லப்போனால் அதனை பலரும் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவே மாட்டோம். அவசியமானது?  ஆனால் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் இன்சூரன்ஸ் உண்...

5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்.. சாமானிய மக்களுக்கு என்னவெல்லாம் பாதிப்பு..?!

Image
5 மாத உயர்வில் சில்லறை பணவீக்கம்.. சாமானிய மக்களுக்கு என்னவெல்லாம் பாதிப்பு..?! இந்திய நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குச் செப்டம்பர் மாத ரீடைல் பணவீக்க தரவுகள் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வு உட்படப் பல்வேறு முயற்சிகளைச் செய்த நிலையிலும் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவது ரிசர்வ் வங்கியின் பெரும் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலக வங்கி, ஐஎம்எ போன்ற பல நிதியியல் அமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சியைக் குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் மாத பணவீக்கம் கூடுதல் பாதிப்பை இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் பணவீக்கம் உயர முக்கியமான காரணம் என்ன..? பணவீக்க உயர்வால் சாமானிய நடுத்தர மக்களுக்கு என்ன பாதிப்பு..? சில்லறை பணவீக்கம் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப்டம்பர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5 மாத உயர்வில் 7.41 சதவீதமாக உயர்ந்துள்ளது என அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய...

“வெடிக்கும்” நிலையில் இந்திய பணவீக்கம்.. அப்படின்னா என்ன? ஒரே வரியில் வகுப்பெடுத்த ரகுராம் ராஜன்

Image
“வெடிக்கும்” நிலையில் இந்திய பணவீக்கம்.. அப்படின்னா என்ன? ஒரே வரியில் வகுப்பெடுத்த ரகுராம் ராஜன் டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்ததுடன் பணவீக்கமும் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பணவீக்கம் என்றால் என்ன என்று ஒரே வரியில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.க்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாகவே விலைவாசி உயர்வு, எரிபொருள் விலையேற்றம் போன்றவை ஏற்பட்டு உள்ளன. இதனால் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை, வேலையின்மை போன்றவை ஏற்பட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலருக்கு நிகராக கடந்த 6 ஆண்டுகளாகவே தொடர் சரிவை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு இடைபட்ட காலத்தில் உலகம் முழுவதும் அச்சுறுத்திய கொரோனா வைரல் தொற்றால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. ஏற்றுமதி இறக்குமதி முடங்கியதால் வளர்ந்து வரும் நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. ரஷியா - உக்ரைன் போர் அதிலிருந்து மீண்டு...

அடேங்கப்பா.,அடிச்சது ஜாக்பாட் – இனி துட்டு கொட்ட போகுது! மிஸ் பண்ணாம இதை பாருங்க!!

Image
அடேங்கப்பா.,அடிச்சது ஜாக்பாட் – இனி துட்டு கொட்ட போகுது! மிஸ் பண்ணாம இதை பாருங்க!! கொரோனா காலகட்டத்தில், தொடங்கப்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை நீட்டித்துள்ளதாக HDFC வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறப்பு FD திட்டம் : தனியார் கடன் வழங்கும் நிறுவனமான HDFC வங்கி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டத்தை நீட்டித்துள்ளது. சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி எனப்படும் இந்த சிறப்பு FD திட்டம் மே 18, 2020 முதல் வங்கியால் வழங்கப்படுகிறது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இந்தத் திட்டம் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30, 2022 அன்று காலாவதியாக இருந்தது. ஆனால் HDFC வங்கி இந்தத் திட்டத்தை மார்ச் 31, 2023 வரை நீட்டித்துள்ளது. மேலும், சிறப்பு FD திட்டங்கள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் “SBI Wecare” டெபாசிட் திட்டம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,” என்று SBI தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் HDFC வங்கியும் நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனியர் சிட்டிசன்கள் பெர...