உங்க குடும்பத்திற்காக முதலீடு செய்ய திட்டமா... இதை தவறாம செய்யுங்க!
உங்க குடும்பத்திற்காக முதலீடு செய்ய திட்டமா... இதை தவறாம செய்யுங்க!
கொரோனாவின் வருகைக்கு பிறகு மக்கள் மத்தியில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. எனினும் எதில் முதலீடு செய்வது? எவ்வளவு முதலீடு செய்வது? என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
அதேசமயம் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், டிவிடெண்டுகள் உரிமை கோரப்படாமல் உள்ளன. இது பயனாளர்கள் எந்தளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கின்றனர் என்பதை காட்டுகின்றது.
சிறிது சிறிதாக குடும்பத்திற்காக சேமித்து வைத்து, அது நமக்கு பிறகு நமது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை என்றால், அதனால் எந்த பயனும் இல்லை. ஆக நீங்கள் முதலீடு செய்வதை சரியாக நமது அன்புகுரியவர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு முதலீடு செய்யும்போது கட்டாயம் நாமினி விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு வேளை நீங்கள் இல்லாதபட்சத்தில் உங்கள் முதலீட்டினை குடும்பத்தினர் அணுகலாம். இது பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், டெபாசிட்கள் என எதுவாக இருந்தாலும், அனைத்திலும் நாமினிகளை பதிவிட வேண்டும்.
இன்சூரன்ஸ்
முதலீட்டில் மட்டும் அல்ல, இன்சூரன்ஸ் திட்டங்களிலும் நாமினியை பதிவு செய்ய வேண்டும். இது சரியான சமயத்தில் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் குடும்பத்தினர், நிதி ரீதியாகவாவது நிம்மதியுடன் இருக்க வழிவகுக்கும்.
பல முதலீடுகளை தவிருங்கள்
ஒரே சமயத்தில் பலதரப்பட்ட முதலீடுகளை செய்வதை தவிருங்கள். இது உங்களுக்கு பாதுகாப்பானதாக அமையலாம். ஒரே நேரத்தில் பலவற்றில் முதலீடு செய்யும்போது அதுவே உங்களுக்கு சவாலானதாக அமையும்.
இது உங்கள் போர்ட்போலியோவினை குடும்பத்தினர் டிராக் செய்வது கடினம்.
போர்ட்போலியோவில் தரமான பங்குகளை தேர்வு செய்யலாம். ஏனெனில் சில பங்குகள் டிவிடெண்டினை அறிவிக்கலாம். இதனை வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான வருமானம் தருவதாக அமையலாம்.
தேவை இல்லாவிட்டாலும் விருப்பம் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக சொத்து அல்லது அசையா சொத்துகளின் வழக்குகளில், உயில் இருந்தால் அது எந்த பிரச்சனையாக இருக்கும். ஏனெனில் பயனாளர் இறந்துவிட்டால் வாரிசுகளுக்கு, எந்த பிரச்சனையும் இல்லாமல் சொத்துகளை பகிர்ந்து கொள்ள உதவும்.
அவசர தேவை
அவசர தேவைக்கு தேவையான நிதியினை திரட்ட அவசர நிதியாக வங்கிக் கணக்கிலோ அல்லது லிக்விட் ஃபண்ட் போன்றவற்றில் எப்படி முதலீடு செய்யலாம். இதன் மூலம் எளிதில் அவசர காலத்திற்கு முதலீடு செய்து கொள்ள வழிவகுக்கலாம்.
Comments
Post a Comment