நுரையீரலை காக்கும் மூலிகைகள்!
நுரையீரலை காக்கும் மூலிகைகள்! துளசி ஆடாதோடை இலவங்கப்பட்டை மிளகுதூள் ஏலக்காய் கற்பூரவள்ளி அதிமதுரம் அகத்திக்கீரை துளசி : துளசி அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மூலிகை. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்னைகள் சீராகும். நுரையீரலை பலப்படுத்தவும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. ஆடாதோடை : ஆடாதோடை மூலிகை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது இருமல் ஏற்பட்டால் கால் தேக்கரண்டி ஆடாதோடை பொடியை தேவையான அளவு தேனில் குழைத்து கலந்து சாப்பிட்டு வந்தால், சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாக இருக்கும். இலவங்கப்பட்டை : இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி வைரல் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிபங்கல் தன்மை நிறைந்துள்ளது. சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணமாக்கும். மிளகுதூள் : மிளகில் வைட்டமின் சி. ப்ளேவனாய்டு, ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இதை சாப்பிடலாம். ஏலக்காய் : ஏலக...